வாக்களிக்க வலியுறுத்த பிரச்சார வாகனம்!வேலூர் கலெக்டர் துவக்கினார்!

கு.அசோக்,
வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கான விழிப்புணர்வு பிரச்சார ஊர்தியை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி துவங்கி வைத்தார்.
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்தி பிரச்சார பயணத்தை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தார்.
இந்த வாகனமானது வேலூர், அணைக்கட்டு கேவிக்குப்பம், குடியாத்தம், காட்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்றது.
அப்போது மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் பணம் பரிசு பொருளை வாக்களிக்க பெற கூடாது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு செய்யவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.