அல்வா கொடுப்பதில் ஏ.சி.சண்முகம் கெட்டிக்காரர்! போட்டுடைத்த அமைச்சர் எ.வ.வேலு!
ஜி.கே.சேகரன்,
அல்வா கொடுப்பதில் ஏ.சி.சண்முகம் கெட்டிக்காரர் என்று அமைச்சர் எ.வ.வேலு வெளிப்படையாக போட்டுடைத்தார். அதே போல் திமுக என்ன மூட்டை பூச்சியா நசுக்கிவிட, மோடி அப்படி கூறும் போது நாடி, நரம்பு, ரத்தம் எல்லாம் கொதிக்கிறது என ஆம்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
வேலூர் மக்களவைத் தொகுதியிற்குட்பட்ட ஆம்பூரில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது, வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை அறிமுகம் செய்து வைத்தனர்.
அப்போது பேசிய வேட்பாளர் கதிர் ஆனந்த் 5 ஆண்டுகளுக்கு முன் நடைப்பெற்ற தேர்தலில்
மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த போது மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி, இருவரும் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுப்பட்ட போது, என்னை மகத்தான வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்தவர்கள் ஆம்பூர் மக்கள்.
என்னுடைய முதல் வெற்றியை ஆம்பூர் வாணியம்பாடி மக்கள் கொடுத்தீர்கள். அதை உயிருள்ள வரை மறக்க மாட்டேன். மேலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று மோடி குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் போது, நாடாளுமன்றத்தில் அதை எதிர்த்தவர்களில் நானும் ஒருவன் என பேசினார்.
அமைச்சர் ஏ.வ.வேலு பேசுகையில், வரும் தேர்தல் சமூக நீதிக்கும், மனு நீதிக்கும் ஜனநாயகத்திறகும், பாசிசத்திற்கும், இடையே நடைப்பெறும் தேர்தல். பாசிச ஆட்சி வந்தால் அரசியல் சட்டம் இருக்காது, அரசியல் சட்டம் இல்லையென்றால் நாம் வாழ முடியாது என்று கூறினார்.
மேலும் விலைவாசி விஷம் போல் ஏறுகிறது, ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசு மாநில அரசுகளை அச்சுற்றுத்தி கொண்டிருக்கிறார்கள். சிஏஏ சட்டத்தை நிறைவேற்ற காரணம் எடப்பாடி வகையறா தான், அவர்கள் தற்போது எந்த மதத்தை வைத்து ஓட்டு கேட்பார்கள்.
இன்னொருவர் இருக்கிறார் ஏ.சி.சண்முகம், ஏற்கனவே வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் தான் ஏ.சி.சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது அவர் ஒன்றும் செய்யவில்லை.
இப்பொழுது அதை செய்கிறேன் என்று அல்வா கொடுக்கிறார். அல்வா கொடுப்பதில் அவர் கெட்டிக்காரர் என பேசினார்.
பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன் கட்சிக்கு உழைப்பவர்களை நான் கண் கண்ட தெய்வமாக கருதுகிறேன். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக அல்ல, ஜனநாயகம், அரசியல் சட்டத்தை காக்க நடைப்பெறும் தேர்தல். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் சுக்குநூறாக உடைப்பேன் என கூறுகிறார்.
ஒரு பெருந்தலைவர் இப்படியா பேசுவது. எங்களை அழிக்காவ நீங்கள் வெற்றி பெற்று வரவேண்டும். திமுக என்ன பொட்டு பூச்சியா? நசுக்கிவிட. திமுக என்பது பாசறையில் பூத்த பூ ஒருபோதும் அதை அழிக்க முடியாது.
திமுகவை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை. திமுகவை அழிக்க நினைத்த ராஜகோப்பால் ஆச்சிரியரை மூட்டு பூச்சி போல் அழித்தோம். திமுகவை அழிப்போம் என மோடி கூறும் போது, நாடி,நரம்பு,ரத்தம் எல்லாம் கொதிக்கிறது.உடல்,பொருள், ஆவி அனைத்தும் கட்சிக்காக அளித்துள்ளோம், என உணர்ச்சி பொங்க பேசினார்.