வேலூர் எம்.பி அளித்த வெள்ள நிவாரணம்!

ஜி.கே.சேகரன்,
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலிக்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஆட்சியர் அலுவலகம் மூலம் அனுப்பினார்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மக்களுக்காக ரூ,2 லட்சம் மதிப்பில் பிரட் பிஸ்கெட்,மற்றும் உணவு பொருட்கள் குடிநீர் பாட்டில்களை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தனது சொந்த செலவில் வழங்கினார். வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
தனை இன்று காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவைகள் இரவே வேலூர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து லாரிகள் மூலம் திருநெல்வேலிக்கு ஏற்றி அனுப்பப்பட்டது.