பதினேழு கட்டளையிட்ட திருப்பத்தூர் ஆட்சியர்!

பதினேழு கட்டளையிட்ட திருப்பத்தூர் ஆட்சியர்!

ம.பா.கெஜராஜ்,

அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வாயிலாக ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதில் பின் வருமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில், அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் விதமாக, கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள் தொடர்பாக கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

அனல் காற்று தாக்கத்தின்போது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்புக் குறிப்புகள்

 1    அனைத்து வீடுகளுக்கும் போதுமான குளோரின் கலந்த குடிநீர் விநியோகம். வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

2     குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதில் குறைபாடு இருந்தால், தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  

3      கிராம ஊராட்சிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குடிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். கள சோதனை கருவிகள் (பீல்ட் டெஸ்டிங் கிட்ஸ்) மூலம் குடிநீர் தன்மை பரிசோதிக்கப்பட வேண்டும்.           

4   குடிநீர் ஆதாரத்தில் குறைவு ஏற்பட்டால் ஆழ்துளை கிணறு சீர் செய்யும் பணியினை ஊராட்சி பொது நிதி மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.     

5      குடிநீர் ஆதாரத்தினை மேம்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் எடுக்க வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றப்பட வேண்டும்.   

6    அனைத்து பொது குடிநீர் குழாய் இணைப்புகளும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.    

7   மார்க்கெட் மற்றும் சந்தை நடைபெறும் பகுதிகளில் தண்ணீர் வசதி உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.       

8  கிராம ஊராட்சிகள் தேவைப்படும் இடங்களில், கால்நடைகளுக்கு நிழல் தரும் கூரைகள் அமைக்கவும், கால்நடை தொட்டியில் (Cattle trough) தண்ணீர் நிரப்பி கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.    

9   கிராம ஊராட்சிகள் சுகாதாரத் துறையுடன் ஆலோசித்து பொதுமக்களுக்கு அனல் காற்று தாக்கம் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.      

 10    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் குறிப்பாக பெண்கள், வயதானோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வெயிலின் தாக்கத்தில் பணிபுரிவது கடினம். எனவே, உள்ளூர் காலநிலை நிலைமைக்கு ஏற்ப பணியின் நேரத்தை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும்.  

11       மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் விதிகளின்படி குடிநீர், முதலுதவிப் பெட்டி மற்றும் இளைப்பாறும் இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தை குறைக்க காலணி மற்றும் தலைப்பகுதிக்கு துண்டு முதலானவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.            

12   பொதுமக்கள் சூடான பானங்களை தவிர்த்து, மோர், இளநீர், நீராகாரம் (rice water), , எலுமிச்சம் சாறு முதலான குளிர் பானங்களை பருக விழிப்புணர்வு வழங்க வேண்டும். 

13     அனல் காற்றின் தாக்கத்தினால் யாரேனும் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக மருத்துவ உதவி வழங்க வேண்டும். ஏனெனில் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.         

14 கிராம ஊராட்சிகள் தேவைப்படும் இடங்களில், தன்னார்வலர்கள் உதவியுடன்  "தண்ணீர் பந்தல்" அமைக்க ஏற்பாடு செய்யலாம். 

15    சுகாதார துறைக்கு அறிவுரைகள் வழங்கி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ளிஸிஷி இருப்பு வைத்து தேவைப்படுவோர்க்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.         

16      உள்ளாட்சி பகுதிகளில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் உணவகங்களில் ORS  இருப்பதை உறுதி செய்து தேவைப்படுவோர்க்கு வழங்கலாம்.       

17   கிராம ஊராட்சி செயலர்கள் அனல் காற்று தாக்கம் பற்றி நன்கு அறிந்து. சுகாதாரத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  

எனவே,அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப.,  அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.