ஆர்பாட்டங்களால் சூழப்பட்ட திருப்பத்தூர்!

ஜி.கே.சேகரன்,
பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் டடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தை கண்டித்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முக்கிய பொறுப்பாளர்கள் சிறுமியின் கொலை சம்பந்தமான குற்றவாளிகளுக்கு நடுரோட்டில் ஓட ஓட சுட்டு வீழ்த்த வேண்டும் என்பது போன்ற கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அந்த தண்டனையை பார்க்கின்றவர்கள் இது போன்ற தவறு செய்யக்கூடாத அளவிற்கு அந்த தண்டனை இருக்க வேண்டும் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தும் மேலும் தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சாவை கட்டுப்படுத்த வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தொண்டர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதே போல், திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் மாவட்ட துணை செயலாளர் சோமசுந்தரம் மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்களை பல்வேறு பிரச்சனைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்பொதுப்பணி நிலைத்திறனில் உள்ள குளறுபடிகளை உடனடியாக தீர்க்க வேண்டும்தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய உயர்வு கமிட்டி அறிக்கையினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.சங்கங்களில் தவணைத் தவறிய நகைகளை ஏலம் விட்ட வகையில் ஏற்பட்ட இழப்பை சங்க நஷ்ட கணக்கிற்கு எடுத்து செல்ல ஆணையிடுகசங்கங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடுகசேலம் நாமக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் பயிர் கடன் தள்ளுபடி விதிமீறல்கள் எனக் கூறி செயலாளர் பழி வாங்குவதை கைவிட வேண்டும்கருணை ஓய்வு ஊதியம் இன்று வரை ஓய்வு பெற்ற அனைத்து பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கிடுக உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டாக்பியா அமைப்பின் சார்பில் நடைபெற்றது.