வேலூர் கீரின் சர்க்கிள் சுற்றளவை குறைக்க ஆட்சியர் ஆய்வு!

ஜி.கே.சேகரன்,
வேலூர் கீரின் சர்க்கிள் சுற்றளவை குறைப்பது, மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் குறைவாக உள்ளனர் வாகனங்களும் சரிவர இல்லை அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் சத்துவாச்சாரி - காங்கேயநல்லூர் மேம்பாலம் அமைக்க விரைவில் பணிகள் துவங்கும் கலெக்டர் பேட்டி!
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வரின் கள ஆய்வு திட்டம் குறித்து, முதல்வர் சரி செய்ய சொன்ன அத்தனை அம்சங்கள் குறித்தும் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இதில் பல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் ஆய்வுக்கு பின்னர் பல்வேறு பணிகள் குறித்தும், நூறு நாள் வேலை திட்டம் வருவாய்த்துறை வீட்டு மனைபட்டா வழங்குவது குறித்தும் ரேஷன் அட்டைகள் வழங்குவது குழந்தைகளுக்கு சத்தாண உணவுகள் வழங்குவது ஆகியவைகள் ஆய்வு செய்தோம்.
பால் கூட்டுறவு உற்பத்தி சங்கங்களின் மூலம் பால் உற்பத்தி கடன் வழங்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம். வேலூர் கல்வியில் பின் தங்கியிருந்தது அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குடிநீர் வழங்க நிதி நிலை அறிக்கை திட்டத்தினை ஏற்பாடு செய்து வருகிறோம்.
குடிநீர் வழங்கபடவில்லை என்றால் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்.
ஓராண்டாக கொரோனாவால் பணிகள் நடக்கவில்லை அதனை சீர் செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கபடும். மேல்நிலை தொட்டிகளின் மூலம் தண்ணீர் வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளது அதனை சரி செய்து நீரை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கீரின் சர்க்கிள் சுற்றளவை குறைப்பது குறித்தும் ஆய்வு செய்தோம் அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விமான நிலையம் அமைக்க 10.7 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது அது தனியாரிடம் உள்ளது அதனையும் கையகப்படுத்தி அவர்களுக்கு உரிய தொகை தந்து நிலத்தை பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தாய் சேய் மரணம் 13.1 சதவிகிதம் உள்ளது அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது பாதாள சாக்கடை பணிகளும் விரைந்து முடிக்க சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் குறைவாக உள்ளனர் வாகனங்களும் சரிவர இல்லை அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் காங்கேயநல்லூர் மேம்பாலம் அமைக்க விரைவில் பணிகள் துவங்கும் னவும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.