சாக்கடை கால்வாயில் பிடுங்கி வீசப்பட்ட பாஜக கொடி கம்பம்!

சாக்கடை கால்வாயில் பிடுங்கி வீசப்பட்ட பாஜக கொடி கம்பம்!

ஜி.கே.சேகரன்,

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அகரம் கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனா.¢ அதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டது. மேலும் அதனை வருகின்ற 17ஆம் தேதி திறப்பு விழா செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது.

   இந்நிலையில் இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், கொடிக் கம்ப மேடையை சேதப்படுத்தியதுடன், கம்பத்தை பிடுங்கி சாக்கடை நீர் கால்வாயில் வீசி சென்றுள்ளனர். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் வடக்கு மண்டல தலைவர் பழனி தலைமையில்  ஆர்பாட்டம் நடத்த முயன்றனர்.

   மேலும் இந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.   எனவே இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டு இந்த குற்றச்சம்பவத்தில்  ஈடுபட்ட மர்மநபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.