விடுப்பட்ட பயனாளிகளுக்கு என்ன செய்வது?கலைஞர் கனவு இல்ல திட்டம் பற்றி திருப்பத்தூர் ஆட்சியர்!

விடுப்பட்ட பயனாளிகளுக்கு என்ன செய்வது?கலைஞர் கனவு இல்ல திட்டம் பற்றி திருப்பத்தூர் ஆட்சியர்!

ஆர்.ரமேஷ்,

 கலைஞர் கனவு இல்லதிட்டத்தின் கீழ் வீடுகள் பெறுவதில் விடுப்பட்ட பயனாளிகளுக்கு என்ன செய்வது என்பது பற்றி திருப்பத்தூர் ஆட்சியர் ஆலோசனை சொன்னார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டத்தின் வாயிலாக குடிசையில்லா தமிழகம் உருவாக்கும் வகையில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3500 வீடுகள் கட்டுவதற்கான பயனாளிகள் தேர்வு செய்ய ஏதுவாக, 208 ஊராட்சிகளில் இன்று (02.07.2024) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட விவர அறிக்கையினை பொதுமக்கள் முன்னிலையில் வாசித்து இத்தீர்மானம் ஒப்புதல் நிறைவேற்றப்பட்டது.

 இத்திட்டத்திற்கான விவரங்கள் இந்த முஏஏவு திட்டத்தின் கீழ் மறுஆய்வு, புதிய குடிசை சர்வே, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சர்வே ஆகிய 3 திட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட சர்வே எண் அடிப்படையில் 3500 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  மேலும், குடிசை வீடுகள் ஏதேனும் இருப்பின் அடுத்த ஆண்டு கணக்கில் சேர்க்கப்பட்டு வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தேர்வு குழுவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்ஃ ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சித்தலைவர், அனைத்து சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

          மேலும், 2000-வது ஆண்டிலிருந்து கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் ஏதேனும் பழுதடைந்த வீடுகளை ஊரக வளர்ச்சி துறையின் மூலம் சீரமைக்கும் பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000ஃ-, அதிகபட்சமாக ரூ.1,50,000/- பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான தீர்மானத்தையும் இந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும்

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப.அவர்கள்  தெரிவித்ததாவது:-

இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.

 இதன் மூலமாக கிராமத்தினுடைய அடிப்படை நிர்வாகம் மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான ஒரு உதாரணமாக திகழ்கிறது. இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் உடைய நோக்கத்தை திட்ட இயக்குநர் மற்றும் பஞ்சாயத்து செயலாளர் மிக தெளிவாக எடுத்துரைத்திருப்பார்கள்.

 தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அது தொடர்பாக அரசினுடைய கவனத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தினுடைய கவனத்திற்கும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

  கூடுதலான விடுப்பட்ட பயனாளிகளுக்கு என்ன செய்வது என்பது இரண்டாம் கட்டமாக, அடுத்தடுத்து கட்டங்களில் மிகத் தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட இருக்கிறது. அதை திட்ட இயக்குநர் தொடர்ந்து பின்பற்றுவார்.

  இந்த திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உறுதியாக இருக்கிறது.

  இந்த முத்தாய்ப்பான திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்த கிராம சபையின் சார்பாக அனைத்து பொதுமக்களையும் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளையும் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

பின்னர், மகளிர் திட்டத்தின் மூலமாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

இந்த கிராம சபா கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமாமகேஸ்வரி, உள்ளாட்சி பிரிதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.