போக்குவரத்து சிக்னல்களை எனக்காக நிறுத்த வேண்டாம்! புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

போக்குவரத்து சிக்னல்களை எனக்காக நிறுத்த வேண்டாம்! புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

எனக்காக  போக்குவரத்து சிக்னல்களை நிறுத்த வேண்டாம் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டு,   மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன். கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்று குறியிருக்கிறார்.

 இது குறித்து விவரம் வருமாறு,

 அம்மாநிலத்தில், அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி, தலைமை செயலர் ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது, போக்குவரத்து சிக்னல்கள் நிறுத்தப்பட்டு வி.ஐ.பிக்கள் சென்ற பின்பு சிக்கனல்கள் இயக்கப்படுவது வழக்கம். இதற்கிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிக்னலில் நிற்க மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் பகல் நேரத்தில் முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனம் சென்றபோது அவருக்காக போக்குவரத்து சிக்னல் நிறுத்தப்பட்டு அவரது வாகனம் சென்ற பின்பு சிக்னல் இயக்கப்பட்டது. தனது வாகனத்தால் பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதை கண்ட முதலமைச்சர் ரங்கசாமி போலீசாருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

   எனது வாகனம் செல்லும் போது சிக்னல்களை நிறுத்தி யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாம். மக்களோடு மக்களாக சிக்னலில் நின்று காத்திருந்து பயணம் செய்ய விரும்புகிறேன். கோடை வெயிலில் மக்கள் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த உத்தரவை அமைச்சர்கள், அதிகாரிகளும் கூட பின்பற்றினால் சூப்பர்தானே.