ரூ4 கோடியில் குடோன்! அணைக்கட்டு மக்கள் மகிழ்ச்சி!

ரூ4 கோடியில் குடோன்! அணைக்கட்டு மக்கள் மகிழ்ச்சி!

கு.அசோக்,

அணைக்கட்டு அருகே கருங்காலி கிராமத்தில் ரூ.4. கோடியே 2 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் வட்ட செயல் முறை கிடங்கை  தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளியில் திறந்து வைத்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தொடங்கி வைத்தார்.

 வேலூர்மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகழகத்தின் சார்பில் ரூ.4 கோடியே 2 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள  வட்ட செயல் முறை கிடங்கை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

   இதனை தொடர்ந்து  மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி அதை தொடங்கி வைத்தார்.  இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அனைக்கட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன் ,நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஞானசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இதன் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும்  ஒடுக்கத்தூர் ,அனைக்கட்டு,அகரம்சேரி,கரடிகுடி ,மகமதுபுரம்,உள்ளிட்ட சுற்றுவட்டார 30-க்கும் மேற்பட்ட  கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.