சிவப்பு நிறமாக மாறிய புதுவை கடல்! மக்கள் உதறல்!

சிவப்பு நிறமாக மாறிய புதுவை கடல்! மக்கள் உதறல்!

  உ.சசிகுமார்,

  திடீரென  புதுச்சேரி கடல் பகுதி  சிவப்பு நிறமாக மாறியதால் புதுவை மக்கள் மற்றும் புதுவைக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

 நேற்று காலை முதல் புதுவை கடல் நீர் சிவப்பு நிறமாக மாறத் தொடங்கியது. சுமார் 200 மீட்டர் வரை செந்நிறமாக மாறியதை அடுத்து கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் பார்த்து வந்தனர். 

  இது குறித்து அதிகாரிகல் தெரிவிக்கையில் ஆற்றில் உருவாகும் ஒரு வகை பூஞ்சை காளான் கடலில் கலக்கும் போது ரசாயன மாற்றம் ஏற்பட்டு நீரின் நிறம் செந்நிறமாக மாறி இருக்கலாம் என்கின்றனர்.

இது தொடர்பாக கடல் நீரை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும்  பொதுமக்கள் யாரும் பீதியடைய  வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.