முதல்வர் திறந்தார்? ஆட்சியர் குத்துவிளக்கேற்றினார்!

கு.அசோக்,
தொரப்பாடியில் ரூ.3 கோடி மதிப்பில் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் துவங்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி குத்துவிளக்கேற்றி வைத்தார்.
வேலூர்மாவட்டம், தொரப்பாடி, ராம்சேட் நகரில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் கால்நடை அரசு பன்முகமருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டது.
இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் சென்னையிலிருந்து துவங்கி வைத்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை துவங்கி வைத்தா£.
வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கால்நடை உதவி இயக்குநர் அந்துவன், பிரதம மருத்துவர் பாண்டியன், கால்நடை மண்டல இணை இயக்குநர் கோபி கிருஷ்ணா, மேயர் சுஜாதா மாநகராட்சி ஆணையர் ஜானகி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.