கேமிரா இருக்கு...ஆனா இல்லை?

சுவாமிநாதன்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், அரியலூர் - பெரம்பலூர் சாலை, மருதையான் கோவில் என்னும் இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளதுஸ்.
இது மாவட்ட காவல்துறை நிரிவாகத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
அந்த கேமரா இருக்கும் திசையை ப்பார்த்தால், சம்மந்தமே இல்லா எங்கோ அது பார்த்துக் கொண்டிருக்கிறது.
அப்படின்னா அந்த கேமிரா சரிவர அது பணியை செய்யாமல் இருக்கலாம் என்பது உறுதியானது.
இது குறித்து அந்த பகுதிவாசிகள் குறிப்பிடுகையில், இந்த பகுதியில் எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும் காவலர்கள் இந்த கேமராவை ஆய்வு செய்வதில்லை ஏன்னா அது இருக்கு...ஆனால் இல்லை.
அதற்காக போலிசார் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அருகில் உள்ள கடைகளில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அவர்கள் பணியை முடிக்கிறார்கள்.
தப்பி தவறிக்கூட அரசாங்கம் பராமரிக்கும் கேமிராவை சீர்படுத்த அவர்கள் முவந்ததே இல்லை.
இப்படிப்பட்ட கேமிராக்களை இனியாவது சீர்படுத்தினால் துப்பு துலக்குதல் போன்றவைக்கு பயனுறுமே?