டுபாக்கூர் மருத்துவர் கைது!

டுபாக்கூர் மருத்துவர் கைது!

நூ.அ.பிலால்,

ஆம்பூர் அருகே போலி மருத்துவர் கைது. கிளினிக் சீல் வைத்து போலீசார் நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில்   எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்பு  படித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக உமராபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடசமுத்திரம் கூட்டு சாலையில் விவசாய நிலத்தை ஒட்டியுள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டனர்.

அப்போது அங்கு மக்களுக்கு துத்திபட்டு பகுதியை சேர்ந்த உமர்ஷரீப் என்பவர் ஆங்கில மருத்துவம் செய்து கொண்டிருந்தார்.

அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மருத்துவ உபகரண பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு கிளினிக் சீல் வைத்தனர்.

அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.