ஐந்தாயிரம் கிலோ கஞ்சாவை எலி திண்பதற்குள் அழித்த போலிசார்!

ஐந்தாயிரம் கிலோ கஞ்சாவை எலி திண்பதற்குள் அழித்த போலிசார்!

 கே.எஸ்.ஜெகதீஸ்வரி,

 காவல் துறையினர் கஷ்டப்பட்டு பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவை பல ஸ்டேஷன்களில் எலி திண்று மட்டையாகிவிடுகிறது. ஆனால் பாவம் கோர்ட் ஏட்டு நீதிமன்றத்தில் அதை நிரூபிக்க முடியாமல் திணறுகிறார். இதனால் குற்றவாளிகள் ஈஸியாக தப்பிவிடுகிறார்கள். இந்நிலையில் தான் திருநெல்வேலியில் சுமார் 5 ஆயிரம் கிலோ பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எஸ்ஸ்.பி.முன்னின்று அழித்தார்.

  காவல்துறை தென்மண்டலத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலும், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாநகரங்களிலும் போதைப் பொருட்கள்  வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து  பறிமுதல் செய்யப்பட்ட 5191 கிலோ 413 கிராம் போதைப் பொருட்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அழிக்க நீதிமன்றங்கள்  ஆணைகளைப் பிறப்பித்திருந்தன.

  போதைப் பொருள் ஒழிப்பு தினமான நேற்று (12.08.2024) மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி மாணவ, மாணவிகளால் ஏற்கப்பட்டது.

 அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுடன் சேர்ந்து போதை பொருட்கள் குறித்து உறுதிமொழி எடுத்து எஸ்.பி. விழிப்புணாவு ஏற்படுத்தினார்.

 அதில்பரப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியிலும் மற்றும் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்கு மாவட்ட காவல்துறை சார்பாக போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 மேலும்  இத்தினத்தை முன்னிட்டு காவல்துறையால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் தென் மண்டல காவல்துறை தலைவர்   திரு. பிரேம் ஆனந்த் சின்கா., இ.கா.ப., அவர்களின் ஆணைப்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் பா. மூர்த்தி., இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவல்துறை தென் மண்டல போதைப் பொருள் அழிப்பு குழு உறுப்பினர்கள் திருநெல்வேலி மாநகர (கிழக்கு) காவல் துணை ஆணையர் திரு. ஆதர்ஷ் பச்சேரா., இ.கா.ப., சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திரு. டாங்கரே பிரவின் உமேஷ்., இ.கா.ப., மதுரை தடயவியல் நிபுணர் திருமதி. விஜயதரணி ஆகியோர் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையச்  சரகத்திற்குட்பட்ட பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியில் உள்ள கிஷிணிறிஜிமிசி ஷிசீஷிஜிணிவிஷி "மெடிக்கல் வேஷ்டேஜ் மேனெஜ்மென்ட் கம்பெனி" என்ற தனியார் நிறுவனத்தில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்டன.

  இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. என். சிலம்பரசன் மற்றும் நாங்குநேரி                               உதவி காவல் கண்காளிப்பாளர் திரு. பிரசன்ன குமார், இ.கா.ப., ஆகியோர் செய்திருந்தனர்.