போதை பொருளை தடுக்க மாணவர்கள் ஊர்வலம்!

போதை பொருளை தடுக்க மாணவர்கள் ஊர்வலம்!

கு.அசோக்,

 வேலூரில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்  நடத்தினர்.

 வேலூர் ¢மாவட்டம், வேலூர் கோட்டை காந்தி சிலை அருகிலிருந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் நடந்தது.

  இதில் பள்ளி மாணவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சாராயம், மது,கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் புற்றுநோய்கள்,காசநோய்கள் உடலுறுப்புகள் செயலழிப்பு உள்ளிட்ட  தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றனா.

¢ இந்த ஊர்வலத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி  கொடியசைத்து துவங்கி வைத்தார் இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது நேதாஜி போலிஸ் விளையாட்டரங்கில் நிறைவடைந்தது.