ஐந்தாம் வகுப்பு மாணவி பள்ளி மைதானத்தில் எரிப்பு!

ஐந்தாம் வகுப்பு மாணவி பள்ளி மைதானத்தில் எரிப்பு!

  பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 ஐந்தாம் வகுப்பு மாணவியின் உடல் எரியூட்டப்பட்ட நிலையில் பள்ளி மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலின் கீழ் உள்ள மலைப்பகுதியில் பாச்சலூர் என்ற கிராமம் உள்ளது.  அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவர் தோட்டத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.    மூவரும் பாச்சலூரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர்.

   இந்தப் பள்ளியில் 110 மாணவர்களே படித்து வருகின்றனர். இவர்களுக்கு வகுப்பெடுப்பதற்கு பத்து ஆசிரியர்கள் உள்ளனர்.

   இதில் சத்தியராஜின் இரண்டாவது மகள், அந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தாள்.

  இந்நிலையில் நேற்று காலை சத்யராஜின் குழந்தைகள் மூவரும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். பள்ளி இடைவேளையின்போது சம்பந்தப்பட்ட மாணவி வெளியே வந்துள்ளார்.

 அப்படியிருக்க பள்ளிகூடத்தில் விளையாட்டு மைதானத்தில் உடல் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், தாண்டிக்குடி காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

  இதையடுத்து சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி சீனிவாசன் விசாரணையை மேற்கொண்டார்.

 இந்நிலையில் குழந்தையின் கால் முட்டிக்குக்கீழ் எரியவில்லை. இது பாலியல் வன்கொடுமையாக இருக்கலாம் என மாணவியின் உடலைப் பார்த்த பெண்கள் கூறுகின்றனர்'' மாணவியின் இறப்பில் மர்மம் உள்ளதாகக் கூறி பாச்சலூர் சாலையில் மாணவியின் பெற்றோர், உறவினர் உள்பட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

  மாணவி எரித்துக் கொல்லப்பட்டாரா?' என்ற நோக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக, பள்ளித் தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்களிடம் தாண்டிக்குடி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வரும் நீலையில், மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாணவியின் பெற்றோர் உள்பட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் குவிந்தனர்.

  அப்பகுதியில் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்ற சூழல் நிலவுகிறது.