மெல்லிய குரலில் ஆத்திச்சூடி பாடிய சிறுமி!

க.பாலகுரு,
நான்கு வயது குழந்தை மழலை மொழியில் பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி சொல்லும் விதத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் பகுதியைச் சேர்ந்த சுகன்யா கார்த்திகேயன் தம்பதியினர் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது மூத்த மகள் கிருத்திகா ஸ்ரீ சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். அந்தப் பள்ளிகள் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறவிருக்கும் போச்சுப்போட்டிக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார்.
அப்படியிருக்க, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் உள்ள சுகன்யாவின் தாயார் வீட்டிற்கு வந்த சிறுமி கிருத்திகாஸ்ரீ, பாரதியாரின் சாவதற்கு அஞ்சேல் சிதையா நெஞ்சு கொள் சிறுவோர் சிறு சுமையினுக்கு இளைத்திடேல் சூரரை போற்று என்ற புதிய ஆத்திச்சூடியை மழலை குரலில் சொல்லி உள்ளார்.
இதை கேட்போர் சிறுமியை வெகுவாக பாராட்டினர்.