ஆளுநர் கொடியேற்றினார்! முதல்வர் பரிசுகளை வழங்கினார்!

ஆளுநர் கொடியேற்றினார்! முதல்வர் பரிசுகளை வழங்கினார்!

ஜி.சாந்தகுமார்,

இந்திய நாட்டின் 74-வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

 குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காவல் பதக்கம், கோட்டை அமீர் விருது, வேளாண் துறை சிறப்பு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதைத்தொடர்ந்து முதலமைச்சருடன் பதக்கம் பெற்றவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைதொடர்ந்து விழா மேடையில் ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  முதல்வரும், ஆளுநரும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் அவர்கள் இருவரும் அவ்வளவாக பேசிக்கொள்ளவேயில்லை.