ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டுமென தீர்மானம்!

ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டுமென தீர்மானம்!

ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் எடுத்த நாச்சார் குப்பம் ஊராட்சியில் 78வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் கலந்து கொண்டார்.

  இதில்,ஊராட்சி மன்ற தலைவர்  காயத்திரி பிரபு  தலைமை தாங்கினார்.  மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தினகரன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை ஏற்றனர்.

  பின்னர் அப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்படும், ஊராட்சியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தெருவிளக்கு, கழிவு நீர் கால்வாய், சாலை வசதி, அரசு பேருந்து வசதி  போன்ற அடிப்படை வசதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றப்படும் என ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வாக்குறுதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.