கருப்பு சட்டையுடன் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டதால் அதிகாரிகள் ஓட்டம்!

ஜி.கே.சேகரன்,

  பாச்சல் பஞ்சாயத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து வந்த ஒருவர் தங்களின் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பாச்சல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொதுமக்களுக்கான கிராம சபா கூட்டம் நடைபெற்றது.  ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருப்பதி தலைமையில் நடந்த இந்த கிராம சபா கூட்டத்தில் பொதுமக்கள்  கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டனர்.

  மேலும் பல்வேறு கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். அப்போது கிராம சபா கூட்டத்தில் கருப்பு நிற சட்ட்டை அணிந்துக்கொண்டு அதில் கலந்து கொண்ட வள்ளலார்நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தங்களின் பகுதிக்கு  எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை

எனக்கூறியும் மேலும் இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளும் பலமுறை மனு அளித்தும் அந்த மனு மீது எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  இதனால் கிராம சபா கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அரசு பொறியாளர் சேகர் கிராம சபா கூட்டத்திலிருந்து வெளியேறி சென்றார்.

  மேலும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் சிலர் இந்த கிராமசபா கூட்டத்தில் பங்கேற்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் கிராமசபா கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து வந்து ஒருவர் தங்களின் பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.