வாலாஜா காவல் நிலையத்துக்குச் சென்ற கலெக்டர்!

வாலாஜா காவல் நிலையத்துக்குச் சென்ற கலெக்டர்!

கு.அசோக்,

 "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் அடிப்படையில் வாலாஜா காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.

   தமிழகத்தில் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  அதன் ஒரு பகுதியாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.

  அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பல்வேறு துறைச்சார்ந்த அலுவலகங்கள் மற்றும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறா£.

¢ அதன்படி வாலாஜா  காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் அதில் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் குற்றவாளிகளின் பதிவேடுகள் கைதிகள் அடைக்கப்படும் சிறை போன்றவற்றை பார்வையிட்டார்.

  அதனைத்தொடர்ந்து வாலாஜா அணைக்கட்டு சாலையில் குறுகிய சாலை காரணமாக அடிக்கடி வாகன போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

   இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண் ஸ்ருதி, காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா, வட்டாட்சியர் அருள்செல்வன் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.