ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக் கோரி ஆர்பாட்டம்!

ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக் கோரி ஆர்பாட்டம்!

ஜி.கே.சேகரன்,

   அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊராட்சி செயலாளர்கள் தமிழகமெங்கும் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

 அந்த வகையில் வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் வினோத் குமார் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது.

  இதில் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, பதாகைகள் பிடித்தபடி கோஷங்களை எழுப்பினார்கள்.

 அதே போல்,  இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

 இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தினர்.