காட்பாடி மிலிடிரி கேண்டினுக்கு செல்ல மேம்பாலம்:-ஆய்வு நடத்திய ஆட்சியர்!

காட்பாடி மிலிடிரி கேண்டினுக்கு செல்ல மேம்பாலம்:-ஆய்வு நடத்திய ஆட்சியர்!

கு.அசோக்,

 காட்பாடியில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மைதானம் செல்வோர்  ரயில்வே கேட்டை கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்

  வேலூர் மாவட்டம், வேலூர், காட்பாடியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம், முன்னாள் படைவீரர்கள் கேண்டீன் மற்றும் பல கிராமங்களுக்கு செல்வோர் ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

  சென்னை பெங்களூர் மற்றும் சென்னை தென்மாநிலங்களுக்கு இவ்வழியாக அதிக அளவு ரயில்கள் செல்வதால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுகிறது.

  அந்த சமயத்தில் நீண்ட நேரம் கேட்டை மூடிவிடுகிறார்கள். ஆகவே அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் மாணவ,மாணவிகளும் பாதிக்கப்படுகின்றனர் இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு செய்தார் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.