மனித ஆயுட்காலத்தை உயர மருத்துவர்கள் ஆராயவேண்டும்! வேலூர் ஆட்சியர் பேச்சு!

மனித ஆயுட்காலத்தை உயர மருத்துவர்கள் ஆராயவேண்டும்! வேலூர் ஆட்சியர் பேச்சு!

 கு.அசோக்,

மருத்துவ மாணவர்கள் மனிதனின் ஆயுட் காலத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் சுகாதாரமாக சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று பேச்சு - முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்று சுவடுகள் விழா வேலு நாச்சியார் வேடமணிந்து வந்த கல்லூரி முதல்வர் - மாணவ, மாணவிகள் வேடமணிந்து அரசர்கள் போல் பங்கேற்பு.

வேலூர்மாவட்டம், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரியின் மாணவர்களுக்கு கோட்டு வழங்கி வரவேற்கும் விழா நடந்தது. இதில் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாப்பாத்தியம்மாள் மற்றும் திரளான மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்

 அப்போது மாணவ, மாணவிகளுக்கு மருத்துவாகள் அணியும்¢ கோட்டுகளை ஆட்சியர் வழங்கி பேசுகையில் மனிதன் தோன்றிய காலம் முதல் தற்போது வரையில் மனிதனின் ஆயுட் காலம் உயர காரணம் நவீன மருத்துவம் தான்.   தற் போது சராசரி மனித ஆயுட் காலம் 70 ஆக உள்ளது. இதனை மேலும் நீங்கள் உயர்த்த பல ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும் அதுமட்டுமின்றி சுகாதாரமான சமுதாயத்தை கட்டமைக்க நீங்கள் சமூக சேவையுடன் செயல்பட வேண்டுமென பேசினார்

அரசினர் கல்லூரி, 

  இதன் பின்னர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் நான் முதல்வன் என்ற மாணவர்களின் திறமையை வெளிகொண்டு வரும் திட்டம் மூலம் வரலாற்று சுவடுகள் விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இதனை துவங்கி வைத்தார்.

 இந்த விழாவில் அரசு கல்லூரி முதல்வர் மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் சேர சோழ பாண்டிய பல்லவ அரசர்கள், முகலாயர்கள், மௌரியர்கள் குப்தா அரசர்கள் சிந்து சமவெளி நாகரீகம் பண்டைய தமிழர் வாழ்க்கை முறைகள் குறித்தும் மாணவர்கள் நடித்தும் விளக்கியும் காட்டினார்கள்.

 அப்போது  கல்லூரியின் முதல்வர் மலர் வேலு நாச்சியார் வேடமணிந்து குதிரை வண்டியில் வந்தார் இந்த வரலாற்று சுவடு விழா அனைவரையும் பழங்கால தமிழர் மான்பையும் நாகரீகத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் நடித்து காண்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.