அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.
வேலூர்மாவட்டம், பாகாயத்தில் உள்ள சி.எம்.சி மருத்துவமனை மைதானத்தில் கல்வித்துறையின் சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கியது. இதில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 38 பள்ளிகளை சேர்ந்த 716 மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டிகள் இன்று துவங்கி வரும் 27 ஆம் தேதி வரையில் நடைபெறும்.
இதில் 25,26,27 ஆகிய தேதி மாணவிகளுக்கான போட்டிகளும் 21 ஆம் தேதி இன்றும் முதல் 24 ஆம் தேதி வரையில் மாணவர்களுக்கான போட்டிகளும் நடக்கிறது.
இப்போட்டிகளை முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி துவங்கி வைத்தா£.¢ இவ்விழாவில் நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடந்து புறக்களும் பறக்கவிடப்பட்டது. மேலும் 100,200,400,600,1500 மீட்டருக்கான ஓட்டப்போட்டிகளும் இன்று நடைபெற்றது.