தாக்கினார்களா? தாக்கப்பட்டார்களா? பணம் பறித்தார்களா? இல்லையா? ஆம்பூர் ரகளை!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டதற்கு 50 ரூபாய் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிவிட்டு 7 ஆயிரம் ரூபாய் பணத்தை போதை ஆசாமிகள் பறித்துக் கொண்டு சென்றதாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பாரத் பெட்ரோல் பங்கில் நேற்று மாலை நாயக்கநேரி பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார் அப்போது சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த இருவர் வந்து 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டுள்ளனர். பெட்ரோல் போட்டதற்கு பணம் கேட்ட பங்க் ஊழியரை மது போதையில் இருந்த அவர்கள் பணம் கொடுக்க முடியாது என்று சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் பங்க் ஊழியர் பெட்ரோல் போட வந்தவர்களை முதலில் தாக்கினார். அதன் பின்னர் இருதரப்புக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.
பங்க் ஊழியர் ஒருவர் தடியை எடுத்து வந்து தாக்குகிறார். ஒருவரை கீழே பிடித்து தள்ளி அடிக்கிறார்கள்.
இந்நிலையில் பங்க் ஊழியரிடமிருந்து 7 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. .
போதை ஆசாமிகள் தாக்கியதில் காயமடைந்த பங்க் ஊழியர் குணசேகரனை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர போலீசார் நேரில் சென்றனர்.
அப்போது, தாக்கினார்களா? தாக்கப்பட்டார்களா? பணம் பறித்தார்களா? இல்லையா? என்று விசாரித்து சம்மந்தப்பட்டவர்களை தேடி வருகின்றார்களாம்.