கறும்பு பிழிவை ஆட்சியர் துவக்கி வைத்தார்!

ஜி.கே.சேகரன்,
கேத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024 -25 ஆண்டுக்கான கரும்பு அரவையை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024-25 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவையை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
மேலும் அரவைப் பருவத்திற்கு சுமார் 76 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அறுவை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கரும்பின் 1 டன் ஒன்றுக்கு 3,267 ரூபாய் வழங்கப்படுவதாகவும் மேலும் ஊக்கத்தொகையாக 215 ரூபாய் தரவுள்ளதாகவும் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.