சிறுத்தையால் பலியானவருக்கு நிவாரணம் கேட்டு மறியல்!

கு.அசோக்,
சிறுத்தை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை வைத்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த துருகம் பகுதியில் நேற்று அஞ்சலி என்ற பெண் சிறுத்தை தாக்கி உயிரிழந்த நிலையில் நேற்று இரவு சடலத்தை கைபற்றி உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது.
இந்நிலையில், உடல் கூறு ஆய்வு முடிந்து ஆம்புலன்ஸில் வந்த சடலத்தை மரித்து உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மின்விளக்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறியும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் நடத்தினர்.