அமித்ஷாவால் ஏற்பட்ட பதற்றம்! உருவ பொம்மை எரிக்க முயற்சி!

கு.அசோக்,
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்ட மேதை அம்பேத்கர் குறித்து இழிவாக பேசியதாக, அமித்ஷாவை கண்டித்து பல மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா மற்றும் திமுகவினர்¢ ஆர்பாட்டம் நடத்தினர். அவரது உருவ பொம்மை எரிக்க முயற்சி காவல்துறையினர் விசிகவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
வேலூர்மாவட்டம்,
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கரை அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மறியல் மற்றும் ஆர்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் நடைபெற்ற இதில் மாவட்டதுணை செயலாளர் இளங்கோ உள்ளிட்ட திரளான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்றனர்.
பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை விடுதலை சிறுத்தைகள் எரிக்கை முயன்றனர் அப்போது காவல்துறையினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம்,
திருப்பத்தூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வேலூர் மண்டல செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் முன்னிலையில் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்மாவட்ட கட்சி அலுவலகத்திலிருந்து திருப்பத்தூர் ரயில் நிலையம் வரை ஊர்வலமாக சென்று அமித்ஷாவை கண்டித்து கோஷமிட்டவாறு இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்பையும் மீறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கலாசண்முகம், மாவட்ட செய்தி தொடர்பாளர் கோ. பார்த்தீபன், மாவட்ட இளஞ்சிறுத்தை பாசறை அமைப்பாளர் கோகுல் அமர்நாத், திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் ௐ பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்தும் கோஷமிட்டு போராட்டம் செய்தனர் போராட்டம் செய்தவர்களை ரயில்வே போலீசாரும் நகர காவல் துறை போலீசாரும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்
இராணிப்பேட்டை மாவட்டம்,
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்ட மேதை அம்பேத்கர் குறித்து இழிவாக பேசியதாகவும் இதனை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் மண்டல துணைச் செயலாளர் தமிழ் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும் தொண்டர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்தும் உள்துறை மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை சாலையில் எரித்து தங்களுடைய கண்டனத்தை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில், சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, விசிக ஆகிய கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவைவும், பாஜகவையும் கண்டித்து நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அணி நிர்வாகிகள் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
சோளிங்கர்
பேருந்து நிலையத்தில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் டாக்டர். அம்பேத்கரைஇழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது.சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் இருந்து 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு டாக்டர். அம்பேத்கரை இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.உள்துறை அமைச்சர் பதவியை அமித்ஷா ராஜினாமா செய்ய கோஷங்கள் எழுப்பினார்கள். முன்னதாக பேருந்து நிலையத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நகர, ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள்.
துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.