100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு! இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் விழா!

 100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு! இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் விழா!

 கு.அசோக்,

இராணிப்பேட்டை,

  இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

   இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று மாவட்டத்துக்கு உட்பட்ட சோளிங்கர் , காவேரிப்பாக்கம், நெமிலி, அரக்கோணம், வாலாஜா,ஆற்காடு,திமிரி ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிக்கு உள்ள  742 சுய உதவி குழுக்களுக்கு 66 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர்ஏ.எம்.முனிரத்தினம், திட்ட இயக்குனர் லோகநாயகி,நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி  ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,சுய உதவி குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர், 

 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுமார் 41 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  வழங்கினார்

   தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். 

  அதனைத் தொடர்ந்து  திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் தனியார் திருமண மண்டப வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு , மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்  தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 536 குழுக்களை சேர்ந்த 982 பயனாளிகளுக்கு ரூபாய் 40.92 கோடி மதிப்பிலான வங்கி கடன் ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

  நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, திருப்பத்தூர் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த பெண்கள் பங்கு பெற்றனர்.