இளங்கலை மாணவியர் விடுதியை திறந்து வைத்த முதலமைச்சர்!

கு.அசோக்,
வேலூரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு இளங்கலை கல்லூரி மாணவியர் விடுதியை முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்ததை அடுத்து - வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவங்கினார்கள்.
வேலூர்மாவட்டம், தொரப்பாடி, ராம்சேட் நகரில் புதியதாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகம் மற்றும் மத்திய அரசின் திட்டமான பாபு ஜெகன் ஜீவன்ராம்,யோஜனா திட்டம் மூலம் அரசு இளங்கலை மாணவியர் விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ரூ,1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இதனை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து மாணவியர் விடுதியை பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் துவங்கி வைத்தார். இவ்விழாவில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு, மேயர் சுஜாதா மண்டல குழுத்தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.