ஏலகிரி மலை மற்றும் ஜலக்காம்பாறை நீர்விழ்ச்சியில் சிறுவர் பூங்கா திறப்புவிழா! மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெரும்மாபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஜலக்கம்பாறை மற்றும் ஏலகிரி மலை பகுதியில் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட ஜலகம்பாறை சூழல் சுற்றுலா தடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
மேலும், ஏலகிரி மலை சிறுவர் பூங்கா 3.5 கோடி மதிப்பீட்டில் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திரந்து வைத்த பின்னர், அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஜலகாம்பாறை அருவி மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்டவர்களை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.