தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்!தொ.ஆ.க. நிர்வாகி பேட்டி!

ஜி.கே.சேகரன்,
தமிழக அரசு 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் நன்றி தெரிவித்து பேட்டி.
வேலூர்மாவட்டம், வேலூரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் ஜனார்த்தனன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த 18 ஆண்டுகளாக தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 171 ஆசிரியர்களை பணி வரன் முறை செய்து அரசாணை விரைவில் வெளியிடப்படும் என நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டத்தற்கு நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் ஆயிரம் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதை உடனடியாக நிரப்ப வேண்டும் மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருதி தொழிற்கல்வி பாடப்பிரிவினை கட்டாயப்பாடமாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென கேட்டுகொண்டார்.
பேட்டியின் போது ஆசிரியர்கள் சச்சிதானந்தம்,மணி ஆகியோர் உடன் இருந்தனர்.