120 விண்ணப்பத்தில் எட்டு ஊர்காவல் படையினர் தேர்வு!

கு.அசோக்,
ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வும் நடைபெற்றது
இராணிப்பேட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் பணியிடங்களுக்கு தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த ஊர்காவல் படை தேர்வுக்கு சுமார் 120-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன.
அதனடிப்படையில், ஓட்டப் பந்தயம் மற்றும் உடல் தகுதி, கல்வி தகுதி, காவல் நிலையத்தில் வழக்குகள் ஏதேனும் உள்ளதா என தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அனைவருமே அழைக்கப்பட்டு
தேர்வானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபா சத்யன்லுத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசுவேசுரய்யா துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த ஊர்க்காவல் படையில் மொத்தம் 120 பதிவு செய்திருந்த நிலையில் தேர்வுக்கு 84 நபர்கள் வரவேற்கப்பட்டு ராணிப்பேட்டையில் ஐந்து பேரும் அரக்கோணத்தில் மூன்று பேர் என 8 பணியிடங்கள் நிரப்பப்பட்டது இந்த பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.