சென்னை சில்க்ஸ் எதிரில் எரிந்த கார்!

கு.அசோக்,
சென்னை சில்க்ஸ் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அனைத்தனர் - கார் முற்றிலுமாக எரிந்தது
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் ரங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் அவரது காரை மாதைய்யன் என்பவர் வேலூரை நோக்கி காரை ஓட்டி சென்றார். கார் சென்னை சென்னை சில்க்ஸ் எதிரில் நெடுஞ்சாலையில் சென்ற போது, அதிலிருந்த ஓயர் கருகியது. அதிலிருந்து புகை வந்ததால் காரை ஓட்டி சென்ற மாதைய்யன் காரை விட்டு இறங்கி அதை சரி செய்ய முயன்றார்.
ஆனால் அதற்குள் கார் மளமளவென தீப்பற்றி எரிய துவங்கியது. தகவலறிந்து வந்த வேலூர் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அனைத்தனர் இதனால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்தது.