பல் விழுந்து தாடி வளர்த்து சாகிற நிலையிலும் நடிக்கிறார்கள்.... அவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
மூத்த நடிகர்கள் என சொல்லி பல் விழுந்தவர்கள் தாடி வளர்த்து சாகிற நிலையிலும் நடிக்கிறார்கள், அவர்கள் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார்.
வேலூர்மாவட்டம்,காட்பாடி, காங்கேயநல்லூரில் உள்ள ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் ஞான வளாகத்தில் அவரது திரு உருவ சிலைக்கு தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,சட்டமன்ற உறுப்பினர் அமுலு ,பகுதிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றிகொண்டு தான் இருக்கிறோம் ஆனால் மறுபடியும் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் பல்வேறு குறுக்கீடுகள் எங்களுக்கு வீடு கட்ட வேறு இடம் இல்லை மாற்று இடம் தாருங்கள் என்று சொல்கிறார்கள்.
சில இடங்களில் பள்ளி கூடங்களையே நீர் நிலைகளில் கட்டியுள்ளனர்.
நீர் வளத்துறையில் போதுமான அதிகாரிகளும் இல்லை எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்துகொண்டு தான் உள்ளோம்.
மேகதாது குறித்து சொல்லி சொல்லி அளுத்துவிட்டோம் கர்நாடகாவினர் அரசியல் பேசுகின்றனர்.
நந்தன் கால்வாய் இந்த ஆண்டு முழுமை பெறும். அதற்காக தனி கவணம் செலுத்தப்பட்டிருக்கிறது. நிறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேவகவுடா பேச்சுவார்த்தை மூலம் மேகதாது அணை விவகாரம் தீர்கபடும் என சொல்வது நம்பத் தகுந்தது அல்ல.
ஆதியிலிருந்து நல்ல எண்ணம் இல்லாதவர் தேவகவுடா. அவருடன் நான் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளேன். தமிழகத்தின் மீது நல்ல எண்ணம் இல்லாதவர் அவர்.
நடிகர் ரஜினிகாந்த் பழையவர்களை வைத்துகொண்டு முதல்வர் மிகவும் சிரமபடுவதாக பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குஅமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கையில், மூத்த நடிகரெல்லாம் வயதாகி போய் பல் விழுந்து தாடி வளர்த்து சாகிற நிலையில் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என கூறினார்.
குறிப்பு:-நேற்று சனிக்கிழமை அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்பொழுது அவர் பேசுகையில், ஸ்டாலின் முன்னாள் மாணவர்களை வைத்துக்கொண்டு சமாளிப்பது மிகவும் கடினம் அதிலும் துரைமுருகன் பேச்சு செயல் ஆகியவற்றை மையப்படுத்தி பேசினார்.
இந்நிலையில் தான் இன்று துரைமுருகன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.