வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திடீர் தீவிபத்து! ரூ.2 கோடி நஷ்டம்!

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திடீர் தீவிபத்து! ரூ.2 கோடி நஷ்டம்!

  ஜி.கே.சேகரன்

   வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திடீர் தீவிபத்து கரும்பு சக்கை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் முழுவதுமாக எரிந்ததில் சுமார் ரூ.2 கோடி தீயில் எரிந்து சேதம் இருப்பினும் விவசாயிகள் கரும்பு அரவையை குறிப்பிட்ட காலத்திற்குள் துவங்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் சர்க்கரை ஆலை தலைவர் பேட்டி. 

வேலூர் மாவட்டம், அம்முண்டியில் மிகவும் பழமை வாய்ந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது, இதில் கரும்பு சக்கை கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பகுதிக்கு கரும்பு சக்கை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதியில் வெல்டிங்க் செய்த போது திடீரென தீ தீபற்றி

எரிந்தது.

 இதில் காட்பாடி தீயணைப்புத்துறையினர் தகவல் அறிந்து வந்து தீயை அனைத்தனர், அத்துடன் ஆலை ஊழியர்களும் தீ அணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில் மின்சாரம் தயாரிக்கும் பகுதியிலும் தீ பரவியது ஆனால் தீ அனைக்கப்பட்டுவிட்டது இந்த தீவிபத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து சர்க்கரை  ஆலை தலைவர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர் தற்போது ஆலை உற்பத்தி இல்லாததால் நால்வாய்ப்பாக உயிரிழ்ப்பு ஏற்படவில்லை..

  இதுகுறித்து சர்க்கரை ஆலையின் தலைவர் ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கன்வயர் பெல்டில்  வெல்டிங்க் செய்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது, தீ மளமளவென பற்றி எரிந்தது இதில் சுமார் 2 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும் இருப்பினும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் கரும்பு அரவை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் துவங்கும் தமிழகத்தில் இந்த சர்க்கரை ஆலை தான் மின் உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.