பொது இடத்தில் குத்துச்சண்டையிட்ட போதை ஆசாமி!

பி.ரமேஷ் ஆனந்தராஜ்,
வேலூர் மாநகர், சி.எம்.சி.மருத்துவமனை அருகே இன்று (28.09.2021) மாலை சுமார் 06.30 மணியளவில் அங்குள்ள சலூன் கடையில் செம ரகளை நடந்துக் கொண்டிருந்தது.
வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் போதையில் அங்கு வந்து பணியிலிருந்தவர்களிடம் தகறாறு செய்துள்ளார்.
கட்டிங்,ஷேவிங் செய்துக் கொண்டிருந்தவர்களிடம் கத்தியை பிடுங்க முயற்சித்தவரை ஊழியர்கள் தடுத்துள்ளார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி சலூன் கடை ஊழியருக்கு குத்து விட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்த எல்லோரையும் அடித்துவிட்டு, சாலைக்கு வந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளார்.
அதை தடுத்த காவலர்களையும் வம்பிழுத்ததால் அவரை ஆட்டோவில் ஏற்றி வடக்கு காவல் நிலையத்திற்கு கொண்டுபோய் ஒப்படைத்தனர்.
அவர் தெலுங்கு பேசுவதாக காவலர்கள் கூறினார்கள்.
அதுவரை கலாட்டா செய்த வாலிபரோ போலீசாரின் பிடியில் சிக்கியதும் ஒரே அலப்பறை செய்துகொண்டிருந்தார்.
குறிப்பு:-காகிதப்பட்டரை, முருகன் கோவில், சைதாப்பேட்டை, சார்பணாமேடு, மக்கான் உள்ளிட்ட பல பகுதிகளில் போதை வஸ்த்துக்கள் விதவிதமாக கிடைக்குதாம்.