வாணியம்பாடியில் திமுக நடத்திய ஆணழகன் போட்டி!

வாணியம்பாடியில் திமுக நடத்திய ஆணழகன் போட்டி!

 கு.அசோக்,

 வாணியம்பாடி நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்ற நிலையில் சாம்பியன் பட்டத்தை கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நடராஜ் என்பர் தட்டி சென்றனர்.

   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி வாரச்சந்தை மைதானத்தில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு திமுக நகர கழக செயலாளர் சாரதி குமார் தலைமை வகித்த போட்டியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

   போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஆணழகன்கள் கலந்து கொண்டனர்.போட்டி பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் தென்னிந்திய அளவிலான சாம்பியன் பட்டத்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நட்ராஜ் என்பவர் தட்டி சென்றார்.பெண்கள் பிரிவில் மூன்று பெண்கள் மட்டும் கலந்து கொண்டனர். 

ஆண்கள் பிரிவில் தென்னிந்திய அளவிலான சாம்பியன்ஷிப் பட்டத்தை கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் கைபற்றினார்.

 அவருக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜி, வில்வநாதன், வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் ஆகியோர் வழங்கினார்கள். 

 நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.