சாத்தனூர்:- உலக வன நாள்!

சாத்தனூர்:- உலக வன நாள்!

கு.சக்திவேல்,

  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சாத்தனூர் வனச்சரகம் சார்பில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் கார்க் அவர்களின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. சாத்தனூர் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் கொழுந்தம்பட்டு எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெகு விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் வனங்களின் நன்மைகள் பற்றி கருத்துரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் தேவேந்திரன் பள்ளி முதல்வர் மணி மற்றும் வனத்துறையினர்கள் ஆசிரியர்கள்  மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.