தலைமை நீதிபதியை வரவேற்ற கலெக்டர்!

உ.சசிகுமார்,
வேலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் திரு. சஞ்சய் வி. கங்கா பூர்வாலா அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட முதன்மை நீதிமன்ற நடுவர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் முன்னிலையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், டிஎஸ்பி திருநாவுக்கரசு ஆகியோர் உள்ளனர்.
நடவடிக்கை
வேலூர் தொரப்பாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நீர் தேங்கியிருப்பதால் அது குறீத்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் நீர்நிலைகளை பார்வையிட்டார்.
அதே போல் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் பொறுட்டு தொரப்பாடி பஜனை கோவில் வாக்காளர்களை சந்தித்து அவர்களை கவுரவித்தார்.
உடன் தாசில்தார் செந்தில் மற்றும் மாநகராட்சி இணை ஆணையர் சசிகலா ஆகியோர் இருந்தனர்.