மாடு முட்டி இறந்த நரிக்குறவர் இளைஞருக்கு மூன்று லட்சம் அறிவித்தார் முதல்வர்!

மாடு முட்டி இறந்த நரிக்குறவர் இளைஞருக்கு மூன்று லட்சம் அறிவித்தார் முதல்வர்!

கு.அசோக்,

 நாகநதி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு  குத்தியதில்  உயிரிழந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ராம்கி என்ற இளைஞரின்  குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் ரூ.3லட்சம்  நிதியுதவி அளித்து தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு.

 வேலூர் மாவட்டம்  , கணியம்பாடி உள்வட்டம், நாகநதி கிராமத்தில் நேற்று நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு குத்தியதில்,    அரியூர் மதுரா திருமலைக்கோடியைச் சேர்ந்த  ராம்கி (வயது 24)   என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 பின்னர் அவர்சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இந்த செய்தியை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உயிரிழந்த நரிக்குரவர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்   ராம்கி என்பவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து  ரூ.3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.