100 நாள் பணியாளர்களை சாலை பணிக்காக பயன்படுத்திய ஊராட்சித் தலைவர்

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே நூறு நாள் பணியாளர்களை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் ஈடுபடுத்தி உள்ள விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த வெங்கட சமுத்திரம் கிராமத்தில் 3 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் அடிப்படையில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்க்கும் மேலாக நடைப்பெற்று வருகிறது,
இதற்காக வெங்டசமுத்திரம் ஊராட்சியில் உள்ள பல தெருக்கள் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் ஏதும் நடைப்பெறாமல், அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது,
இதனால் தெருக்கள் குண்டும், குழியுமாக, ஆங்காங்கே கற்கள் பெயர்ந்திருப்பதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்க்குள்ளாகி இருக்கிறார்கள்.
ஒப்பந்தகாரர்கள் யாரும் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடாததால், வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி நவீன்குமார் மற்றும் நூறுநாள் வேலை பணித்தள பொறுப்பாளர் பார்த்திபன் ஆகியோர் நூறுநாள் பணியாளர்களை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியில் ஈடுப்படுத்தியுள்ளனர்,
மேலும் நூறுநாள் பணியாளர்கள் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.