மாற்றுத்திறனாளிக்கு உதவிய வாணியம்பாடி எம்எல்ஏ

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்றஇளைஞரை எம்.எல்.ஏ செந்தில்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறி அவரை காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டதால்
அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டு பகுதியில் எம்.எல். ஏ செந்தில்குமார் கழிவுநீர் கால்வாய் சாலை வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் கல்வித்தரம் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவு குறித்து சத்துணவு அமைப்பாளர்களிடம் விசாரித்தார்.
இதணை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் -தீபா இவர்களின் மகன் திருப்பதி (17) இவர் பிறப்பிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 17 ஆண்டு காலமாக சுய நினைவின்றி வாழ்ந்து வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய் தந்தை இருவரும் உயிரிழந்து விட்டனர்.
இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் திருப்பதி தனது வயதான பாட்டி அரவணைப்பில் வசித்து வந்துள்ளார்.
தற்போது மூதாட்டியும் பணிகளுக்கு எங்கும் செல்ல முடியாமல் வருமானம் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் மனநல பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அவ்வப்போது சிகிச்சை அளிக்க கூட பணமில்லாமல் அவதிப்பட்டு வருவதை அறிந்த எம்.எல்.ஏ செந்தில்குமார் நேரில் சென்று அவர்களுக்கு ஆதரவு கூறி அவரை உடனடியாக காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.
மனநலம் பாதிக்கப்பட்டு இளைஞரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உடனடியாக காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட எம்.எல். ஏவை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
குறிப்பு:- வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் மேலும் பல மக்கள் பணிகள் செய்யப்பட வேண்டி உள்ளது, அதையெல்லாம் சட்டமன்ற உறுப்பினர் எப்போது செய்வார் என்று வாக்காளர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் அதையும் அவர் சீர் செய்தால் இன்னும் பலரும் பாராட்டுவார்கள்.