காட்பாடியில் ஆய்வு நடத்திய ஆட்சியர்!

காட்பாடியில் ஆய்வு நடத்திய ஆட்சியர்!

 த.நெல்சன்,

 வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் சித்தூர் பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேறுவது குறித்தும், மழைநீர் வடிநீர் கால்வாயை தூர்வாருவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள தீர்த்தகிரி மலைப் பகுதியில் ஒரு இலட்சம் விதை பந்துகள் தெளிக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.  

  மேல்மொணவூர் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மாணவ / மாணவியர்கள் திறன் பயிற்சி முடித்த சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார்.

 இந்த ஆய்வின் போது துணை மேயர் திரு.சுனில் குமார், 1வது மண்டல குழு தலைவர் திருமதி.புஷ்பலதா வன்னியராஜா, வட்டாட்சியர் திரு.ஜெகதீஸ்வரன், ஒன்றிய குழு தலைவர் திருமதி.அமுதா ஞானசேகரன், வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பாபு, வேலம்மாள் போதி வளாக பள்ளி வளாக மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  (நில எடுப்பு) திரு.முத்துராமலிங்கம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் திருமதி.காயத்ரி, பயிற்சி அலுவலர் திரு.செரிப், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி.ரம்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.