மலை கிராமங்களுக்கு சாலை! அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!! செல்போன் டவர் - மினி பஸ் வசதிகள் செய்யப்படும்!

ஜி.கே.சேகரன்,
ஜவ்வாது மலைதொடர் கிராமமான பீஞ்சமந்தைக்கு முதன் முதலாக சுமார் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைத்து திறப்பு விழா - மலை கிராம மக்கள் வசதிக்காக துணை மின் நிலையம் ஒன்று அமைக்க முன் மொழிவு செய்யபடும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கதென்னரசு பேச்சு - மலை கிராமத்தில் மினி பேருந்தும் செல்போன் டவரும் அமைத்து தரப்படும் அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
வேலூர்மாவட்டம், ஜவ்வாது மலை தொடர்கிராமமான பீஞ்சமந்தைக்கு ஜார்தான் கொல்லை உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலை வசதி கோரி கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ரூ.5.11 கோடி மதிப்பீட்டில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சாலை புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் தலைமை தாங்கினார் இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சாலையை திறந்து வைத்தா£,¢ மேலும், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கதென்னரசு அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்து நலத்திட்ட உதவிக வழங்கப்பட்டது.
முன்னதாக மேளதாளங்களுக்கு ஏற்ப மது அருந்திய மலைவாசி ஒருவர் நடனமாடி மக்களை மகிழ்வித்தார் பின்னர் அவர் மேடையில் ஏறிய போது கீழே இறக்கினார்கள் காலை முதல் காத்திருந்ததால் ஒரு முதாட்டி மயங்கி விழுந்தார் இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
பின்னர் நடைபெற்ற விழாவில் நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கதென்னரசு பேசுகையில் மலை வாழ் மக்கள் பகுதிக்கு மின்சார பிரச்சணை இருப்பதாக என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனால் இம்மக்கள் பயன்பெறும் வகையில் பீஞ்சமந்தையில் துணை மின் நிலையம் அமைத்து தர முன்மொழிவு செய்யப்படும். நிதியமைச்சர்களாக இருப்பவர்கள் அதிகம் பேச கூடாது பேசினால் பின் விளைவுகள் ஏற்படும் என பேசினார்.
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் இந்த பகுதி மக்கள் வசதிக்காக போக்குவரத்துத்துறை அமைச்சரை சந்தித்து மினி பேருந்து ஒன்றை இயக்க நடவடிக்கை எடுப்பேன் அத்துடன் மற்றொரு செல்போன் டவர் தேவை என கூறியிருக்கிறார் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தை அழைத்து வந்து அமைக்க ஏற்பாடு செய்வேன் என பேசினார்.
பின்னர் பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இங்குள்ள 9 கிராமங்களுக்கு 120 கோடி குடிநீர் சாலை வசதி செய்து தரப்படும் என பேசினார்.