அரசு ஆஸ்பத்திரியில் தரையில் படுத்துக்கிடந்த நோயாளி! டீனை வறுத்தெடுத்த எம்.பி.!

சீனிவாசன்,
அரசு ஆஸ்பத்திரியில் தரையில் படுத்துக்கிடந்த நோயாளியை பார்த்த எம்.பி. சுப்பராயன் வேதனையடைந்தார்.!
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கல்லூரி கட்டுமான பணி, நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் ஆய்வு நடத்தினார்.
அப்போது முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது, ஒரு முதியவரை, தரையில் படுக்க வைத்திருந்தனர்.
இ தைப்பார்த்த, எம்.பி., சுப்பராயன், கல்லு?ரி 'டீன்' முருகேனிடம், அரசிடம் கேட்டு உங்களால் படுக்கை வசதி கூட வாங்கி தர முடியாதா? வார்டுக்குள் வருவதற்கும், போவதற்கும் இடைஞ்சலாக இந்த படுக்கை உடைந்து போயுள்ளது.
இதையெல்லாம் மாத்திட்டு புதுசா, வாங்க வேண்டியது தானே?'' என, ஆவேசமாக கேட்டார்.
''கூடுதல் படுக்கை வசதி கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம், சார். இன்று படுக்கை வந்துவிடும். நோயாளிகள் அதிகமாக இருந்ததால், தற்காலிகமாக படுக்க வைத்துள்ளோம்,'' என 'டீன்' முருகேசன் சமாளித்தார்,