குடும்ப கட்டுபாடு அவசியம் பற்றின பேரணி! ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நடத்தினார்!

கு.அசோக்,
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வேலூர் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
வேலூர்மாவட்டம், வேலூரில் அண்ணாகலையரங்கம் அருகிலிருந்து மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமைதாங்கி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
முன்னதாக உறுதிமொழியும் எடுக்கப்பட்டது இதில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் மற்றும் அரசு அதிகாரிகள் மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி நகர அரங்கம் அருகில் நிறைவு பெற்றது.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுபடுத்த வேண்டும், குடும்ப கட்டுபாடு அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மக்கள் தொகை பெருக்கம் நாட்டிற்கு ஆபத்து போன்ற பல்வேறு துண்டு பிரசுரங்களை வழங்கியதுடன் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.