போலிஸ் கைதுக்கு பயந்து டிரான்பார்மரில் ஏறிய வாலிபர்!

போலிஸ் கைதுக்கு பயந்து டிரான்பார்மரில் ஏறிய வாலிபர்!

ஜி.கே.சேகரன்,

வாணியம்பாடி அருகே மணல் கடத்தல் தொடர்பாக போலிசார் கைது செய்ய சென்ற  போது டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி மற்றும் பழனி ஆகியோர் மாட்டு வண்டியில் பாலாற்றில் இருந்து மணலை கடத்திக் கொண்டு வரும்பொழுது அவ்வழியாக சென்ற ரோந்து காவல்துறையினர் மாட்டு வண்டியை மடக்கி மணல் கடத்தலில் ஈடுபட்ட  2 பேரை கைது செய்ய முயன்றனர்.

  அப்போது அங்கிருந்து தப்பி சென்ற மணல் கொள்ளையன் ஜோதி, அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி அமர்ந்து கொண்டு தன்னை கைது செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என காவல்துறையினரை மிரட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  நிலைமையை சாதுரியமாக சமாளித்த காவல்துறையினர் அங்கிருந்து விலகி சென்ற நிலையில் ஊர் மக்கள் டிரான்ஸ்பார்மரிலிருந்து ஜோதியை கீழே இறங்குமாறு அவரது குடும்பத்தினரை அழைத்து அறிவுரை கூறியதால் மின்மாற்றிலிருந்து மணல் கொள்ளையன் ஜோதி கீழே இறங்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

 மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட  மற்றொரு நபர் பழனியை  காவல்துறையினர் கைது  செய்து மாட்டு வண்டியையும்  பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.